நூல் : பசி(Hunger)
ஆசிரியர் : எலிஸ் பிளாக்வெல்
மொழியாக்கம் (தமிழ்) : ச. சுப்பாராவ்
இலக்கிய நடை : சிறு நாவல் (Novella)
முதற்பதிப்பு : 2013
இளம் விஞ்ஞானி ஒருவர் லெனின் கிராடு மாநகரத்தில் விதைகள் பண்படுத்தும்,சேமிக்கும் ஆய்வு மையம் ஒன்றில் வேலை செய்கிறார். பின்னணி ஹிட்லர் படை ஆக்கிரமிப்பு. சுமார் 872 நாட்கள் அங்கு சூழல் தலைகீழாக மாறிவிடுகிறது. உணவு தட்டுபாடு தலைவிரி கோலமாக மாறுகிறது. உண்ண ஒன்றும் கிடைக்காமல் மக்கள் மர கீற்றுகள் முதல் எலி வரை என்ன கிடைத்ததோ அதை உண்ண முற்படுகின்றனர். ரேஷன் மானியம் என்று அளவான ரொட்டி குடுத்து உதவுகிறது. ஆனாலும் மக்கள் பசி போராட்டத்தில் தோற்று மாய்ந்து மடிகின்றனர்.
சிறார்களுக்கு மலிவான பசை முதல் திருடிய மர கீற்றுகள் கஞ்சியாக கொடுக்கப்படுகிறது. இருந்தாலும் பசி கொடிய எதிரியா உருவெடுக்கிறது.
அரசியல் அமைப்புக்கள் விதைக்கிடங்கின் உதவி நாடுகிறது. அந்த அமைப்பின் இயக்குனர் சிறை செல்கிறார். இளம் விஞ்ஞானி பலர் பசியால் வாடியபோதும் அங்கே பல இடங்களில் இருந்து கொண்டுவரப்பட்ட விதை,தானியம்,அரிசி,பழ கொட்டைகள் என அனைத்தையும் பாதுகாக்கின்றன.
பாதுகாக்கும் பணி, போராட்டம் ஆகிறது. பல ஆய்வு புரியும் இளம் வயதினர் இறை ஆகிறார்கள்.
872 நாட்கள் கழித்து லெனின் கிராடு ஹிட்லரின் நாஜி படையின் ஆக்கிரமிப்பு பிடியிலிருந்து அகழ்கிறது .
ஆய்வு மையம் நிம்மதி பெருமூச்சு விடுகிறது. ஆனாலும் அது பல ஆய்வு புரியும் இளைஞர்களை இழந்து அவலம் காண்கிறது.
" வலிதான் வாழ்க்கையின் விலை என்று எனக்குள் சொல்லிக்கொண்ட டேன்."
இறுதியில் விதைகளை காத்து நின்றவன் மட்டும் உயிர் பிழைக்கிறான்.
மனைவி,நண்பர்கள் என தன் வட்டம் இப்போது அவனுடன் இல்லை.
விதைகள் இருக்கும் குப்பிகள் மற்றும் பத்திரமாக அவனிடம் உள்ளது. எஞ்சிய ஒன்று.
ஹிட்லர்
போர் காலம்
சண்டை செய்வது
மாய்ந்து மடிவது
குண்டு வெடிப்பு
இதனை பார்த்தும், படித்தும் கேட்டும் பழகிய நமக்கு பசியால் மனிதனே மனிதனுக்கு எதிரி ஆன அவலம் காட்டுகிறது இந்நூல்.
பேசப்படாத பசி பிணி பற்றி நுணுக்கம் ஏந்தி நிற்கும் நூல் இது.
~வாசியுங்கள். நேசியுங்கள்.
~அழகு.
#2/25
No comments:
Post a Comment