Monday 20 April 2020

நூல் : திருக்கார்த்தியல்
ஆசிரியர் : ராம் தங்கம்
இலக்கிய நடை : சிறுகதை (தொகுப்பில் -  11சிறுகதைகள்)
முதற்பதிப்பு : 2018
பதிப்பகம் : வம்சி



~ What one loves in childhood stays in the heart forever.

குழந்தை பருவம் ஒருவரின் வாழ்க்கையை தீர்மானிக்கும். மிகவும் அமைதி நிறைத்த பருவம் எனலாம். இவ்வாறு அமைய வரம் இருப்பின் அக்குழந்தையின் வாழ்வும் செய்யுரும்..

முரணாக முட்கள் நிறைந்த பாதை அவரின் குழந்தை பருவம் எனில் , சுவடு தழும்பாக காலம் வரை கரை ஆக தொடரும்.

11 சிறுகதை வாயிலாக 11 அப்பாவியான குழந்தைகளை கடந்து செல்லும் பயணம் கிட்டும் நூலின் வாயிலாக.

அன்றைய தினம் நிச்சயம் இல்லை என நன்கு அறிந்த சிறுவர்கள், கதையின் கரு சுமந்து வருகின்றன.

லிங்கம்,செந்தமிழ்,வினோத், பானி,சுரேஷ்,கார்த்திக் மனதில் எளிதாக இடம் பெறுகின்ற சிறுவர்கள்.
இவர்களின் பதிவை கடந்து செல்லும் போது மனதில் பாதிப்பு நிச்சயம்.

11 சிறுகதைகளும் ஆக சிறந்தது எனினும் மனதில் நின்றவை
1. வெளிச்சம்
Positive phase என சொல்லக்கூடிய திருப்பம் லிங்கம் அறிகிறான்.

2. செந்தமிழ்
இந்த சிறுவனின் கோவம் நியாயமானதாக உணர்வீர்கள்.

3. வினோத் தன் பிராணனை போக உழைக்கையில் பரிதாபம் பச்சாதாபம் தோன்றாது. மாறாக சமூகத்தின் மீது கோவம் வரும்.

ஆக சிறந்த 11 சிறுவர்களும் ஏதோ ஒரு சமூக தீமையில் இருந்து மீண்டு வர முயல்கின்றனர்.

முயற்சி பலன் தந்ததா என்பதே தொகுப்பில் உள்ள கரு.

வாழ்க்கை சொர்க்கம் எனில் குழந்தை பருவம் தந்த பாக்கியம்.

இயலாமை சமூகத்தின் மறு பக்கமாக திரும்பி விடுகிறது.

அருமையான
கூர்மையான
குழந்தைத்தனம் பொதிந்த நூல்.

~ வாசியுங்கள். நேசியுங்கள்.

~அழகு.
#4/25

No comments:

Post a Comment

SAPIENS

//Sapiens A Brief History of Humankind by Yuval Noah Harari//                                                                ...