Monday 20 April 2020

நூல் : வாழ்வின் இயக்கத்தில் மனிதனின் தனிமை
ஆசிரியர் : பேயோன்
முதற்பதிப்பு : 2016
பக்கம் : 244
பதிப்பகம் : சஹானா




கவிதை வாசிப்பது என்பது அந்தி பொழுதின் ரம்மியம். சூரியன் வீடு திரும்பி கொண்டிருக்கலாம், பறவைகள் கூடு அறியலாம். எங்கோ இளஞ்சூட்டில் எஞ்சிய பனி, கோட்டை எழுப்பி வர முற்படலாம். அப்படியான ஒரு அலாதிய பிரமிப்பு நம்முள் எஞ்சும் கவிதை வாசிக்கும் நேரம்.
பேயோன் ஒரு களஞ்சிய பெட்டகம். எதை பற்றி வேண்டுமானாலும் கவிதை செய்யலாம். இந்நூல் அதற்கு சான்று.

இயற்கை
மிருகம்
காதல்
மனிதன்
எண்ணம்
எண்ணத்தில் புதைந்திருக்கும் வண்ணம்
ஜனனம்
மரணம்
யோசனை
என அனைத்து அங்கமும் அடக்கம் தொகுப்பில்.

நாள்தோறும் கடந்து, கடத்தி சென்ற அனைத்து சிறு முதல் கூர் அணுக்கள் வரை அனைத்தும் ஏந்தி வந்துள்ளது நூல்.

கவனத்திற்கு :
1. அட்டை படம் சுவாரசியமின்றி தொய்வு ஏற்படுத்தலாம்.
2. 250 கவிதைகள் உள்ளதால் அதில் சிறந்த அல்லது மிக பிடித்த கவிதை ஒன்று உள்ளது என்று வரையறுக்க முடியவில்லை.
3. தித்திப்பு - திகட்டல்.
(பிரித்து அறிய இயலவில்லை).

தொகுப்பில் இருந்து ஒரு சில துளிகள்:
பல் விழுதல்
ரகசியம்
ராட்சத மலர்*
பார்க்கும் புத்தர்
நேற்று பெய்த கனமழை

~ புயல் ~
பெறுங்காற்று மூட  விடவில்லை
திறந்துவைத்துப்
 போனால் அறைந்து சாத்துகிறது.

~கொள்கை ~
சகிப்போம்
சிறகடிப்போம்

கடலோர கால்நடை பயணம் செய்து மீண்டும் வீடு திரும்பும் அலாதியம்.

வாசியுங்கள். நேசியுங்கள்.
~அழகு.
#3/25

No comments:

Post a Comment

SAPIENS

//Sapiens A Brief History of Humankind by Yuval Noah Harari//                                                                ...