நூல் : காட்டில் ஒரு மான்
ஆசிரியர் : அம்பை ( சி.எஸ். லக்ஷ்மி)
முதல் பதிப்பு : 2000
இலக்கிய நடை: சிறுகதை
பதிப்பகம் : காலச்சுவடு
விலை : 225
தொகுப்பில் 17 சிறுகதைகள் அடக்கம்.1995-2000 காலகட்டத்தில் முளைத்த கதைகள்.
எனில் "பெண்ணியம்" என்னும் சொல் இந்திய பெண்களின் வாசம் அறிந்திருக்கும் காலத்தில் முளைத்த கதைகள்.
மணி ரத்னம் இயக்கிய படங்கள் போன்று அம்பை அவர்களின் கதைகளும். அழகியல் பேசும் திரைக்கதை,மொழிநடை. எங்கும் பரவியிருக்கும் அழகுணர்ச்சி. பெண்களை பற்றி கையாளும் தொகுப்பு ஆதலால் தான் இவ்வளவு அழகு பேசப்படுகிறது என்று நினைத்தால் மறுபுறம் அந்த 1995-2000 காலம் பெண்களின் வசம் பெண்ணியம் வாசம் எட்டிப்பார்த்தது எனலாம்.
அழுத்தம் எதுவும் எடுத்துக்கொள்ளாமல் செல்கின்ற வழியே இதான் மா நடந்தது, இதுதான் புரட்சி பாதைக்கு வழி என்று கை பிடித்து கூட்டி செல்லும் முறை சொர்கம்.
"பயணம் 1,2,3" என்று மூன்று வேறு ஆண்டுகளில் வெளியிடப்பட்ட கதைகள். மூன்றிலும் அம்பை அவர்களின் மனப் போக்கு வேறு படுவதை உணரலாம்.
அன்றாடம் உலா வரும் பெண்கள் கதாபாத்திரங்கள். அம்மாவாக இருக்கலாம். கல்லூரி ஆசிரியை ஆக இருக்கலாம்.
இசை பிரியயை ஆக இருக்கலாம். துறவி ஆக முற்படும் வேற்று சித்தாந்தம் உள்ள பெண்மணி. இப்படி கதாபாத்திரங்கள் கதை வடிப்பார்கள்.
"வாகனம்" என்னும் கதையில் வரும் பெண்ணிற்கு வண்டி ஓட்ட பயில்வதே கனவு. கனவு மெய்யாக எவ்வாறு முயற்சி செய்கிறாள் என்பதும்,அந்த காலக்குடும்ப அமைப்பில் இதனின் சிக்கல்கள் என்ன என்பதும் அம்பையின் உணர்வுப்பூர்வமான வெளிப்பாடு. அம்மா கண் முன்னே வந்ததும் நினைவில் பத்திரம். ஒரு வேளை அம்மாவின் ஏக்கமும் இதுதானா என்றும் தோன்றுகிறது.
"அடவி" என்னும் கதை இந்த தொகுப்பில் வெளியானது.சீதை ஒரு நிகழ்வு இராமாயணத்தில். இராமன் கொண்டாடப்படுகி றான். அவன் புகழ் ஓங்கி ஒலிக்கிறது பார் எங்கும். நான் சீதையை கொஞ்சம்ப்போல் என் கதையில் எடுத்து செல்கிறேன் என்று சீதையின் வாயிலாக தொலைந்துபோன சீதைகளை பேசியுள்ளார் அம்பை. இந்த சிறுகதையின் நடை மிகவும் கவனத்தை ஈர்த்தது. இரண்டு கோணங்களில் பார்க்கும் விதம் அழகியலின் தரிசனம்.
"பிளாஸ்டிக் டப்பாவில் பராசக்தி முதலியோர்" கதையில் வரும் அம்மா கதாபாத்திரம் அனைவரும் அடுத்து காண விரும்பும் நம்மில் ஒருவராகக் கூடும். அனைவருக்கும் அவரவர் வாழ்வை வாழ உரிமை உள்ளது என்று மிக சூசகமாகக்குரல் கொடுத்த பெண்மணி இவரே. தொகுப்பில் உள்ள அனைத்து பெண்களின் கலங்கரை விளக்கம்.
புரட்சிப்பல கண்ட பிறகே பெண்ணியம் பேசுறாங்க பாருங்க, என்று கடந்த சில ஆண்டுகளாக கேட்க நேர்கிறது.போகிற வழி மிகவும் சாதகமாக அமையபெற்று இருப்பின் நிச்சயம் அம்பை வடித்த சில பெண்கள் அந்த போராட்டங்களை கடந்து வந்தவர்கள் ஆக இருப்பர்.
இந்தாங்கமா இதான் நடந்தது, படித்து தெரிந்து கொள்ளுங்கள் என்று கதையினை நகர்த்தி கொண்டு போன விதம் அழகு.
Liberation என்று சொல்லலாம், அம்பை கதைகளை வாசித்த பிற்பாடு தேங்கி இருப்பது.
மணி ரத்னம் படங்கள் பார்ப்பீர்கள் என்றால் அம்பை உங்கள் புத்தக வரிசையில் இருப்பார்.
~ வாசியுங்கள். நேசியுங்கள்.
~ அழகு.
#7/25
ஆசிரியர் : அம்பை ( சி.எஸ். லக்ஷ்மி)
முதல் பதிப்பு : 2000
இலக்கிய நடை: சிறுகதை
பதிப்பகம் : காலச்சுவடு
விலை : 225
தொகுப்பில் 17 சிறுகதைகள் அடக்கம்.1995-2000 காலகட்டத்தில் முளைத்த கதைகள்.
எனில் "பெண்ணியம்" என்னும் சொல் இந்திய பெண்களின் வாசம் அறிந்திருக்கும் காலத்தில் முளைத்த கதைகள்.
மணி ரத்னம் இயக்கிய படங்கள் போன்று அம்பை அவர்களின் கதைகளும். அழகியல் பேசும் திரைக்கதை,மொழிநடை. எங்கும் பரவியிருக்கும் அழகுணர்ச்சி. பெண்களை பற்றி கையாளும் தொகுப்பு ஆதலால் தான் இவ்வளவு அழகு பேசப்படுகிறது என்று நினைத்தால் மறுபுறம் அந்த 1995-2000 காலம் பெண்களின் வசம் பெண்ணியம் வாசம் எட்டிப்பார்த்தது எனலாம்.
அழுத்தம் எதுவும் எடுத்துக்கொள்ளாமல் செல்கின்ற வழியே இதான் மா நடந்தது, இதுதான் புரட்சி பாதைக்கு வழி என்று கை பிடித்து கூட்டி செல்லும் முறை சொர்கம்.
"பயணம் 1,2,3" என்று மூன்று வேறு ஆண்டுகளில் வெளியிடப்பட்ட கதைகள். மூன்றிலும் அம்பை அவர்களின் மனப் போக்கு வேறு படுவதை உணரலாம்.
அன்றாடம் உலா வரும் பெண்கள் கதாபாத்திரங்கள். அம்மாவாக இருக்கலாம். கல்லூரி ஆசிரியை ஆக இருக்கலாம்.
இசை பிரியயை ஆக இருக்கலாம். துறவி ஆக முற்படும் வேற்று சித்தாந்தம் உள்ள பெண்மணி. இப்படி கதாபாத்திரங்கள் கதை வடிப்பார்கள்.
"வாகனம்" என்னும் கதையில் வரும் பெண்ணிற்கு வண்டி ஓட்ட பயில்வதே கனவு. கனவு மெய்யாக எவ்வாறு முயற்சி செய்கிறாள் என்பதும்,அந்த காலக்குடும்ப அமைப்பில் இதனின் சிக்கல்கள் என்ன என்பதும் அம்பையின் உணர்வுப்பூர்வமான வெளிப்பாடு. அம்மா கண் முன்னே வந்ததும் நினைவில் பத்திரம். ஒரு வேளை அம்மாவின் ஏக்கமும் இதுதானா என்றும் தோன்றுகிறது.
"அடவி" என்னும் கதை இந்த தொகுப்பில் வெளியானது.சீதை ஒரு நிகழ்வு இராமாயணத்தில். இராமன் கொண்டாடப்படுகி றான். அவன் புகழ் ஓங்கி ஒலிக்கிறது பார் எங்கும். நான் சீதையை கொஞ்சம்ப்போல் என் கதையில் எடுத்து செல்கிறேன் என்று சீதையின் வாயிலாக தொலைந்துபோன சீதைகளை பேசியுள்ளார் அம்பை. இந்த சிறுகதையின் நடை மிகவும் கவனத்தை ஈர்த்தது. இரண்டு கோணங்களில் பார்க்கும் விதம் அழகியலின் தரிசனம்.
"பிளாஸ்டிக் டப்பாவில் பராசக்தி முதலியோர்" கதையில் வரும் அம்மா கதாபாத்திரம் அனைவரும் அடுத்து காண விரும்பும் நம்மில் ஒருவராகக் கூடும். அனைவருக்கும் அவரவர் வாழ்வை வாழ உரிமை உள்ளது என்று மிக சூசகமாகக்குரல் கொடுத்த பெண்மணி இவரே. தொகுப்பில் உள்ள அனைத்து பெண்களின் கலங்கரை விளக்கம்.
புரட்சிப்பல கண்ட பிறகே பெண்ணியம் பேசுறாங்க பாருங்க, என்று கடந்த சில ஆண்டுகளாக கேட்க நேர்கிறது.போகிற வழி மிகவும் சாதகமாக அமையபெற்று இருப்பின் நிச்சயம் அம்பை வடித்த சில பெண்கள் அந்த போராட்டங்களை கடந்து வந்தவர்கள் ஆக இருப்பர்.
இந்தாங்கமா இதான் நடந்தது, படித்து தெரிந்து கொள்ளுங்கள் என்று கதையினை நகர்த்தி கொண்டு போன விதம் அழகு.
Liberation என்று சொல்லலாம், அம்பை கதைகளை வாசித்த பிற்பாடு தேங்கி இருப்பது.
மணி ரத்னம் படங்கள் பார்ப்பீர்கள் என்றால் அம்பை உங்கள் புத்தக வரிசையில் இருப்பார்.
~ வாசியுங்கள். நேசியுங்கள்.
~ அழகு.
#7/25
No comments:
Post a Comment