நூல் : கழிமுகம்
எழுத்தாளர் : பெருமாள்முருகன்
விலை : 150
முதல் பதிப்பு : 2018
பதிப்பகம் : காலச்சுவடு
மனிதனின் இயல்புநிலை காலக்கணக்கில் மாறுபடும்,சிந்தனைகளும் வேறுபடும். இதனை Generation Gap என்று குறிப்பிடுவர். அழகான சூழலில் வாழும் ஒரு குடும்பத்தின் எதார்த்தம் இந்நூல். அசுரர் என்று மனிதனை அழகின் உச்சத்தில் வைத்து கதை வடித்துள்ளார் முருகன். அப்பா குமராசுரர். அம்மா மங்காசுரரி. ராவண குல தெய்வம் என்று குறிப்பு உள்ளது நூலில். ஆதலால் மேகாஸ் என்று மகன் பெயர் சூட்டப்படுகிறான். காலத்தின் ஓட்டம் அப்பாவிற்கு,குடும்ப தலைவர் எனும் பதவி உயர்வு பெற்று தருகிறது. மகன் காலத்தின் சுழற்சியில் புதையுண்டு மாற்றம் ஒன்றே விதி என்று வாழ்வின் பக்கங்களை கடந்து செல்கிறான். இருவருக்கும்மான மன போராட்டம், புரிதல் எவ்வாறு நடைபெறுகிறது என்பது முருகனின் கைவண்ணம். சமீபத்தில் குழந்தைகளை கையாள்வது ஒரு குடும்பத்தின் சவால் ஆகியிருக்கும் மாற்றம் நாம் காணும் எதார்த்தம். அதனின் எதார்த்த வெளிப்பாடு இந்நூல். மொழி பரிமாற்றம் மிக அழகாக உள்ள பெருமாள் முருகனின் நாவல் இது.
வாசியுங்கள். நேசியுங்கள்.😊
~அழகு
#1/25
Good one. nice story..
ReplyDeleteThanks Annae:)
ReplyDelete