Wednesday 22 April 2020

நூல் : சஞ்சாரம்
ஆசிரியர் : எஸ்.ராமகிருஷ்ணன்
முதற்பதிப்பு : 2018
இலக்கிய நடை : நாவல்
(2018 சாகித்திய அகாதமி விருது பெற்றது)

மங்கள இசை - ஒரு காலகட்டத்தில் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் தலையாய, முதன்மை நிகழ்ச்சி. (இப்போதும் கூட).
இதனை தொடர்ந்து அன்றைய இதர நிகழ்ச்சிகள் ஒளிபரப்பாகும்.
தீபாவளி,பொங்கல் என்றால் மங்கள இசை மொழியே முதலில் பேசும்.

 குழந்தையாக இதான் நினைவில் தங்கியது. அதுவரை யாரோ தொலைக்காட்சி பெட்டிக்குள் சென்று, அமர்ந்து இசை மொழி ஆற்றுகிறார்கள் என தோன்றும்.

வளர்ந்து சற்று வெளியுலகம் பார்த்த போது கோவிலில் காண நேர்ந்தது. கோவில் திருவிழா,திருமண விழா இங்கே இவர்களை பார்த்த ஞாபகம். இன்னும் சற்று முன்னோக்கி நகர்ந்து வாழ்க்கை முறை என்ன,எவ்வாறு வாத்தியம் பரிச்சயம் ஆகிறது,இவர்களுடைய வாழ்வாதாரம் என்ன என்றெல்லாம் நின்று ஒரு நொடி கூட யோசித்தது இல்லை.

சமூகத்தில் ஒரு அங்கம்,என்னை போன்று இவர்களும் சமூகத்தின் ஒரு பாகம் என்றும் கூட யோசித்தது இல்லை.
ஒரே புத்தகம் காணும் காட்சியை கடுமையாக மாற்றியுள்ளது.

நாதஸ்வரம் பெரும்பாலான மக்கள் கோவில் திருவிழாக்களில் ஊர்வலம் வரும்போது வாசிக்க கேட்டிருப்போம்.
அதுதான் அதிகபட்சம் நமக்கு இசைக்கலைஞர்கள் இப்படியும் இசை கருவி கையாள்கிறார்கள் என தெரிந்து கொண்ட தருணம்.

ஒடுக்கப்பட்ட சமூகத்தின் ஓலமாகவே இந்நூல் அமைந்துள்ளது. பக்கிரி நாதஸ்வர கலைஞன். ரத்தினம் குழு கரிசல்காடு ஓதியூர் பகுதியில் வசிக்கும் அன்றாடம் பிழைக்கும் இசை கலைஞர்கள். சோழ நாட்டில் நாதஸ்வரம் வாத்தியம் பயின்று பயிற்சி செய்வோர் புகழின் உச்சியில் இருக்க ரத்தினம்,பக்கிரி போன்றோர் அன்றாடம் பிழைப்பு நடத்துவதே பெரும் போராட்டம்.
வாழ்க்கையின் எதார்த்தம் சவுக்கடி கொடுத்தபடியே உள்ளது.

வறுமை அவர்களின் வாழ்க்கை முறையை பெரிதாக மாற்றிவிடுகிறது. ஒரு நாள் இசைக்கலைஞர்க்கு
கிடைக்கப்பெறும் அங்கிகாரம்,கௌரவம் நிச்சயம் கிடைக்கும் என்ற எண்ணம் பல உள்ளூர் வாசிகளின் இகழ்ச்சி, தூற்று,கொச்சை பேச்சு - ஐ, பொறுத்து கொள்ள  செய்கிறது.

பக்கிரியின் வாயிலாக ஒரு நாதஸ்வர கலைஞன் எவ்வாறு செதுக்கப்படுகிறான் என்பதை அழகாக, துல்லியமாக விளக்கியுள்ளார் எஸ். ரா.
இராகவையாவை குருவாக பெற்று நாதஸ்வரம் பயில்கிறான் பக்கிரி. பள்ளி படிப்பு அல்லாது இசைக்காக இசைந்து அனுப்படுக்கிறான்.
வறுமை ஒழிக்க வருமானம் கிடைக்கும் என்ற அசட்டு நம்பிக்கை பக்கிரியின் அப்பாவிற்கு.

பக்கிரியின் வாயிலாக டேவிட் ஹாக்கின்ஸ் அறிமுகம் ஆகிறார் நமக்கு. வெள்ளைக்காரன் இந்தியா வை ஆட்சி செய்ய மட்டும் முற்படவில்லை. டேவிட் போன்று சில கலை வெரியர்களையும் அறிமுகம் செய்துள்ளது.  நாதஸ்வரம் இசை ஒரு வகை ஈர்ப்பு ஆக மாறிவிட சிவன் கோவி லில் தங்கி ஞானம் பெறுகிறான்.

சுமார் எட்டு ஆண்டு காலம் பயிற்சி தேவை படுகிறது நாதஸ்வரம் பயில, செம்மையான மூச்சு பயிற்சி,அதிகம் ஆளுமை மூலமாகவே நாதஸ்வரம் இசைக்க முடியும்.
இவ்வளவு சிரத்தை எடுத்து பயின்ற போதும் வாய்ப்புகள் சரிவர கிடைப்பதில்லை.
மற்ற இசை கலைஞர்க்கு கிடைக்கும் மரியாதை, அங்கீகாரமோ கிடைப்பதில்லை.
முரணாக வசை மொழி,இகழ்ச்சி மட்டும் நிரந்தரம் ஆகிறது.

ஜமிந்தர்கள்,இசை விமர்சகர்கள்,முகலாய மன்னன் மாலிக் கபூர் அவர்களை தரிசனம் செய்ய வைத்த இசை நாதஸ்வரம் என்பது நூலின் குறிப்பு.

இவ்வாறு அதிசயம் பொதிந்த இசை கருவி என்றாலும் சமூகத்தின் வரம்பு இதனை அங்கீகரிக்க மறுத்துவிட்டது என்பது நிதர்சனம்.

நூலின் ஊடே சென்று பக்கிரி வாயிலாக நிறைய அறிந்து கொண்ட உண்மை ஒரு தெளிந்த ஓடையில் செல்லும் இலை என மாற்றியுள்ளது. தெளிந்த நீரோடை இவர்களின் வாழ்க்கை இல்லை என்பதும் வலி தரும் உண்மை.

 மாற்றம் தரக்கூடிய வாசிப்பின் பட்டியலில் இந்நூல் நிச்சயம் அடங்கும்.

எஸ்.ரா அவர்களுக்கு மரியாதையும் வணக்கத்தையும் தெரிவிக்க வேண்டும், அங்கிகாரம் இல்லாத மனிதர்களுக்கு நூல் ஒன்றை வடித்தமைக்கு.

பாதை இருக்கிறது. வழி  செம்மை அடையும்.
இசை உள்ளவரை கலைஞர்கள் கௌரவம் ஓங்கும்.
இசை சமூக ஏற்றத் தாழ்வுகளை என்றுமே அங்கீகரித்தது இல்லை.

மாற்றம் நோக்கி நாளை செய்வோம்.

~வாசியுங்கள். நேசியுங்கள்.

~அழகு.
#5/25

3 comments:

  1. Yours is an elegant review. It prods me to go in search of the novel. And, that's the real success of the reviewer! Thanks, keep going.

    ReplyDelete

SAPIENS

//Sapiens A Brief History of Humankind by Yuval Noah Harari//                                                                ...