வேள்பாரி வாசிப்பனுபவம்...
வேள்பாரி வாசிக்கும் முன்.
1. பாரி கடையேழு வள்ளல்களில் ஒருவன்.
2. முல்லை கொடிக்கு தேர் கொடுத்தவன் பாரி.
3. கபிலர் - குறிஞ்சித்தினை
வேள்பாரி கையில் இருந்தும் இதே செருக்கு கொண்டுதான் வாசிக்க துவங்கினேன்.
பாரி மன்னனின் புகழும் பெயரும் எங்கும் பரவியிருக்கிறது.. எப்படி இது சாத்தியம்.. தெரிந்துக் கொள்ள வேண்டும் எனும் ஒற்றை கீற்றுடன் தான் பறம்பு மலை அடிவாரத்தில் கால் பதித்தார் கபிலர்.
நீலன் வந்தான். கபிலருக்கும் செருக்கு நம்மை போன்றது ஆயிற்றே.. எப்படி நீலனை அணுகி இருப்பார்..
அப்படியாக தொடர்கிறது பறம்பு மலையின் சாகசம்...
பறம்பு முழுதும் பேசுகிறது பாரி என்னும் ஒற்றை கீற்று பற்றி..
சிறு புல் முதல் பெருத்த யானை வரை.. யாருக்குதான் தெரியாமல் இருக்கும், அரண் ஆயிற்றே..
இயற்கையோடு ஒன்றி வாழும் மக்களின் இயல்பு. அறம் பிறழாமல் செய்யுற வாழும் மக்களின் கண்ணியம். தற்காப்பு புரியும் அறிவுநுட்பம் கத்தி கூர்மை. வாழ்வியல் கூற்றுகள் பாரியின் பறம்பு மலையை கிழக்கு ஆக பார்க்கும் உணர்வு.
ஒரு ஊர்ல ஒரு ராஜா.. இப்படியான பல வரலாறு கதைகள் வழியே நம்மிடையே பல மன்னர்கள் வந்தவண்ணம் இருப்பர். காலத்திற்கு ஏற்றவாறு வடிவம் மாறிக்கொண்டே இருக்கும். வரலாறு பேசியவண்ணம் கதை நகரும்.மன்னனின் பெருமை கதை வழிய நீண்டு வாழும்.
ஆனால் சு.வெ நம்மிடம் கொண்டுவந்துள்ளது பாரியின் வீரம் பேசும் வரலாறு மட்டுமா???!
நிச்சயம் வேறு..
ஒரு மன்னன் தன் குடியை காக்க வேண்டும். தன் மக்களை எதிரியின் பிடியிலிருந்து காக்க வேண்டும். இந்த நடையில் இருந்து
பாரி எவ்வாறு வேறு படுகிறான்??
இயற்கையோடு கொஞ்சி தவழும் வாழ்வு நெறி..
ஒரு மன்னன் தன் மக்களை காக்க சிந்திப்பான். அறிந்ததே.. புல்,பூண்டு,விதை,செடி,கொடி,இலை,மரம்,வேர்,மிருகம், பறவை,மண் இதனையும் தன்னுள் வைத்து அறம் காக்கிறான்.
வியப்பின் உச்சம்.
காலத்தின் நிலை அறிந்து சு.வெங்கடேசன் அவர்கள்.
இந்நூலின் கரு வரைந்து உள்ளார்.
நாம்தான் அனைத்தையும் அடக்கி ஆளும் ஆற்றல் கொண்டு வந்துள்ளோம் என்று செருக்கு இருந்தால் இதோ இந்த நொடி அற்றுப்போகட்டும்.
இயற்கை எவ்வளவு பெரிய பொக்கிஷம். அதுதான் மனிதனின் வாழ்வை செய்கிறதே ஒழிய மனிதன் நான்தான் அனைத்தையும் ஆள பிறந்தவன் என்று எண்ணம் கொண்டால் கொன்றுவிடும் இந்நூல்.
விகடன் பிரசுரம் என்றும் வியப்பு கொடுக்க தவறுவதில்லை. சான்று கதை வடிக்கும்
ஓவியங்கள். மனக்கண்ணில் விரியும் காட்சிகள் பக்கங்களில் தூரிகை..
பிரமிப்பு...நீங்காமல்
சு. வெ அவர்களிடம் நாலைந்து கேள்வி நாணை தொடுப்போம்...
1.இவ்வளவு செம்மையான திட்டமிடல் எவ்வாறு சாத்தியமானது?
2. புல்,பூச்சி, பச்சி,பாம்பு,விலங்கு,பறவை,பாரி,பறம்பு
நுணுக்கம் எங்கேயிருந்து சேகரித்தீர்?
3. போர்க்களம் வடிவமைப்பு அறம் பேணுதல்,நிலைமான் கோல்சொல்லி, போருக்கான விதிகள் வரையறுப்பது இதெல்லாம் எப்படி உருவானது?
மீண்டது பாரி மட்டும் இல்லை.. மனிதன்
மீண்டு வர இயற்கை அறம் போற்ற வேண்டும் என்னும் கருத்தினை தெரிவிக்கவும், பாரி யை ஈன்று தந்துள்ளார் சு.வெங்கடேசன்.
பிரமிப்பு நீங்காமல்..
இன்னொரு முறை பறம்பு நோக்கி பயணிக்க தோன்றுகிறது..
இம்முறை சோமபப் பூண்டு பானம்,கொள்ளிக்காட்டு விதை, பாழி நகர் கற்கள், தேவவாக்கு விலங்கு அடைய துணிந்த வணிகம் மோகம் கொண்டு உள்ள மூவேந்தர்களின் பிடியிலிருந்து தப்பி நீலன்,மயிலா,பொற்சுவை,உதிரன்,தேக்கன்,முடியன், இரவாதன், பழையன் இவர்களின் வழியில் தொடரலாம் என்று உத்தேசம்...
"பனையன் மகனே...
பாரி வேளே
நின்னை வெல்வோர் யாருமில்லை..."
பறம்பு நோக்கி மீண்டு(ம்)ஒரு முறை..
~வாசியுங்கள். நேசியுங்கள்.
~அழகு.
#8/25
வேள்பாரி வாசிக்கும் முன்.
1. பாரி கடையேழு வள்ளல்களில் ஒருவன்.
2. முல்லை கொடிக்கு தேர் கொடுத்தவன் பாரி.
3. கபிலர் - குறிஞ்சித்தினை
வேள்பாரி கையில் இருந்தும் இதே செருக்கு கொண்டுதான் வாசிக்க துவங்கினேன்.
பாரி மன்னனின் புகழும் பெயரும் எங்கும் பரவியிருக்கிறது.. எப்படி இது சாத்தியம்.. தெரிந்துக் கொள்ள வேண்டும் எனும் ஒற்றை கீற்றுடன் தான் பறம்பு மலை அடிவாரத்தில் கால் பதித்தார் கபிலர்.
நீலன் வந்தான். கபிலருக்கும் செருக்கு நம்மை போன்றது ஆயிற்றே.. எப்படி நீலனை அணுகி இருப்பார்..
அப்படியாக தொடர்கிறது பறம்பு மலையின் சாகசம்...
பறம்பு முழுதும் பேசுகிறது பாரி என்னும் ஒற்றை கீற்று பற்றி..
சிறு புல் முதல் பெருத்த யானை வரை.. யாருக்குதான் தெரியாமல் இருக்கும், அரண் ஆயிற்றே..
இயற்கையோடு ஒன்றி வாழும் மக்களின் இயல்பு. அறம் பிறழாமல் செய்யுற வாழும் மக்களின் கண்ணியம். தற்காப்பு புரியும் அறிவுநுட்பம் கத்தி கூர்மை. வாழ்வியல் கூற்றுகள் பாரியின் பறம்பு மலையை கிழக்கு ஆக பார்க்கும் உணர்வு.
ஒரு ஊர்ல ஒரு ராஜா.. இப்படியான பல வரலாறு கதைகள் வழியே நம்மிடையே பல மன்னர்கள் வந்தவண்ணம் இருப்பர். காலத்திற்கு ஏற்றவாறு வடிவம் மாறிக்கொண்டே இருக்கும். வரலாறு பேசியவண்ணம் கதை நகரும்.மன்னனின் பெருமை கதை வழிய நீண்டு வாழும்.
ஆனால் சு.வெ நம்மிடம் கொண்டுவந்துள்ளது பாரியின் வீரம் பேசும் வரலாறு மட்டுமா???!
நிச்சயம் வேறு..
ஒரு மன்னன் தன் குடியை காக்க வேண்டும். தன் மக்களை எதிரியின் பிடியிலிருந்து காக்க வேண்டும். இந்த நடையில் இருந்து
பாரி எவ்வாறு வேறு படுகிறான்??
இயற்கையோடு கொஞ்சி தவழும் வாழ்வு நெறி..
ஒரு மன்னன் தன் மக்களை காக்க சிந்திப்பான். அறிந்ததே.. புல்,பூண்டு,விதை,செடி,கொடி,இலை,மரம்,வேர்,மிருகம், பறவை,மண் இதனையும் தன்னுள் வைத்து அறம் காக்கிறான்.
வியப்பின் உச்சம்.
காலத்தின் நிலை அறிந்து சு.வெங்கடேசன் அவர்கள்.
இந்நூலின் கரு வரைந்து உள்ளார்.
நாம்தான் அனைத்தையும் அடக்கி ஆளும் ஆற்றல் கொண்டு வந்துள்ளோம் என்று செருக்கு இருந்தால் இதோ இந்த நொடி அற்றுப்போகட்டும்.
இயற்கை எவ்வளவு பெரிய பொக்கிஷம். அதுதான் மனிதனின் வாழ்வை செய்கிறதே ஒழிய மனிதன் நான்தான் அனைத்தையும் ஆள பிறந்தவன் என்று எண்ணம் கொண்டால் கொன்றுவிடும் இந்நூல்.
விகடன் பிரசுரம் என்றும் வியப்பு கொடுக்க தவறுவதில்லை. சான்று கதை வடிக்கும்
ஓவியங்கள். மனக்கண்ணில் விரியும் காட்சிகள் பக்கங்களில் தூரிகை..
பிரமிப்பு...நீங்காமல்
சு. வெ அவர்களிடம் நாலைந்து கேள்வி நாணை தொடுப்போம்...
1.இவ்வளவு செம்மையான திட்டமிடல் எவ்வாறு சாத்தியமானது?
2. புல்,பூச்சி, பச்சி,பாம்பு,விலங்கு,பறவை,பாரி,பறம்பு
நுணுக்கம் எங்கேயிருந்து சேகரித்தீர்?
3. போர்க்களம் வடிவமைப்பு அறம் பேணுதல்,நிலைமான் கோல்சொல்லி, போருக்கான விதிகள் வரையறுப்பது இதெல்லாம் எப்படி உருவானது?
மீண்டது பாரி மட்டும் இல்லை.. மனிதன்
மீண்டு வர இயற்கை அறம் போற்ற வேண்டும் என்னும் கருத்தினை தெரிவிக்கவும், பாரி யை ஈன்று தந்துள்ளார் சு.வெங்கடேசன்.
பிரமிப்பு நீங்காமல்..
இன்னொரு முறை பறம்பு நோக்கி பயணிக்க தோன்றுகிறது..
இம்முறை சோமபப் பூண்டு பானம்,கொள்ளிக்காட்டு விதை, பாழி நகர் கற்கள், தேவவாக்கு விலங்கு அடைய துணிந்த வணிகம் மோகம் கொண்டு உள்ள மூவேந்தர்களின் பிடியிலிருந்து தப்பி நீலன்,மயிலா,பொற்சுவை,உதிரன்,தேக்கன்,முடியன், இரவாதன், பழையன் இவர்களின் வழியில் தொடரலாம் என்று உத்தேசம்...
"பனையன் மகனே...
பாரி வேளே
நின்னை வெல்வோர் யாருமில்லை..."
பறம்பு நோக்கி மீண்டு(ம்)ஒரு முறை..
~வாசியுங்கள். நேசியுங்கள்.
~அழகு.
#8/25