Thursday 24 March 2016


மனம்
இன்னதென்று அறியா
வெற்றிடம்
நிரம்பிய இடம் எனில்
வலி இல்லை
ஏக்கம் இல்லை
ஏக்கம் தாங்கிய
தாக்கம் இல்லை - இல்லை
என்றொரு
நிலை இல்லை!

மனம்
இன்னதென்று அறியா
வெற்றிடம்
நிரம்பிய இடம் எனில்
உவகை என்னும்
ஆர்பரிக்கும் உச்ச
நிலை இல்லை!

மனம்
இன்னதென்று அறிய
இல்லை என்ற ஒன்றும்,
இருப்பில் இருக்கும் ஒன்றும்
கலந்திட திடம் கொணர்ந்து
வெற்றிடம் போக்கி
மனம் செய்
மனித மனமே!

2 comments:

SAPIENS

//Sapiens A Brief History of Humankind by Yuval Noah Harari//                                                                ...