மனம்
இன்னதென்று அறியா
வெற்றிடம்
நிரம்பிய இடம் எனில்
வலி இல்லை
ஏக்கம் இல்லை
ஏக்கம் தாங்கிய
தாக்கம் இல்லை - இல்லை
என்றொரு
நிலை இல்லை!
மனம்
இன்னதென்று அறியா
வெற்றிடம்
நிரம்பிய இடம் எனில்
உவகை என்னும்
ஆர்பரிக்கும் உச்ச
நிலை இல்லை!
மனம்
இன்னதென்று அறிய
இல்லை என்ற ஒன்றும்,
இருப்பில் இருக்கும் ஒன்றும்
கலந்திட திடம் கொணர்ந்து
வெற்றிடம் போக்கி
மனம் செய்
மனித மனமே!
Good poetry work Akka
ReplyDeleteThank you da B-)
Delete